குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: அடிக்கல் நாட்டும் விழா
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் முள் வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. முள் வேலி அமைக்கும் பணிகளும் முடிந்த நிலையில், இன்று ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
Update: 2025-08-27 10:26 GMT