சூறைக்காற்றால் பாம்பன் பாலம் அருகே நின்ற ரெயில்; பயணிகள் தவிப்பு
ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற வாரந்திர ரெயில் பாம்பன் பாலத்தில் வீசிய சூறைக்காற்று காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து காற்றி வேகம் குறைந்து 20 நிமிடங்களுக்கு பிறகு சிக்னல் வந்ததால் ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் பாலத்தில் ரெயில் செல்ல சிக்னல் வழங்கப்படாது. சுமார் 20 நிமிடம் பாம்பன் பாலத்தில் ரெயில் நின்றதால் பயணிகள் பரிதவித்தனர்.
Update: 2025-11-27 12:31 GMT