தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும் - உதயநிதி


கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது.

முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 39 பேர் உயிரிழந்த துயரத்தை தாங்க முடியவில்லை. 3 மாவட்ட ஆட்சியர்கள் மீட்பு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது த.வெ.க.வினரின் கடமை. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்

இவ்வாறு அவர் கூறினார். 

Update: 2025-09-28 06:05 GMT

Linked news