மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025
மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
மோந்தா புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி
சென்னை,
திருவள்ளூர்,
செங்கல்பட்டு,
கோயம்புத்தூர்,
காஞ்சிபுரம்,
கன்னியாகுமரி,
ராணிப்பேட்டை,
தென்காசி,
தேனி,
நீலகிரி,
திருநெல்வேலி,
திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Update: 2025-10-28 08:31 GMT