வளர்த்த கடா மார்பில் எட்டி உதைத்தது - ராமதாஸ் புகார்
மன உளைச்சலில் இருந்ததாக அன்புமணி பேசியது குறித்து தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மக்களையும் கட்சியினரையும் திசைதிருப்பி அனுதாபம் பெற அன்புமணி முயற்சி செய்கிறார்.கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்திய கட்சியில் கலகத்தை அன்புமணி ஏற்படுத்தினார். இனிப்பை தவிர்த்து கசப்பான மருந்தைத்தான் பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வளர்த்த கடா மார்பில் எட்டி உதைத்தது.
கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்துள்ளார். அழகான ஆளுயர கண்ணாடியான கட்சியை ஒரு நொடியில் உடைத்தது யார்? புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில் மேடை நாகரீகம் இல்லாமல் செயல்பட்டது யார்? ஏதோ போகிற போக்கில் இதை நான் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் சொல்கிறேன் என்றார்.
Update: 2025-05-29 05:20 GMT