டிட்வா புயல் - இலங்கையில் பலி எண்ணிக்கை உயர்வு
டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 193-ஆக உயர்ந்துள்ளது. 228 பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை முழுவதும் 9.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,094 முகாம்களில் 1.47 லட்சம் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-11-30 09:10 GMT