ரஷியாவின் கூட்டணி நாடாக உள்ள பெலாரஸ் நாட்டை போரில் இழுக்கும் நோக்கத்துடன் ரஷியா உள்ளது.




உக்ரைனின் வடக்கே செர்னிகிவ் நகரில் உள்ள தேஸ்னா கிராமத்தின் மீது பெலாரஸ் நாட்டில் இருந்து இன்று அதிகாலை 20 ஏவுகணைகள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டன.

இதுபற்றி உக்ரைனின் வடக்கு ராணுவம் முகநூலில் வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைனின் கீவ் நகருக்கு அருகே உள்ள எல்லை பகுதியில் ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த ஏவுகணைகள், பெலாரஸ் நாட்டில் இருந்து ஏவப்பட்டு உள்ளன.

உக்ரைன் மீது நடத்தப்படும் இந்த போரில், பெலாரஸ் நாட்டையும் உள்ளே இழுக்கும் நோக்கத்துடன் ரஷிய கூட்டமைப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.

Update: 2022-06-25 13:26 GMT

Linked news