சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில் இன்று (18.11.2025 - வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 103 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 910 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 63 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 899 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 99 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 546 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 80 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 673 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
80 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 917 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 53 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 102 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.