பொதுத்துறை வங்கியில் 500 காலிப்பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஜெனரல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் மகாராஷ்டிரா உள்ளது. இந்த வங்கியில் காலியாக உள்ள ஜெனரல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் பின் வருமாறு:
பணியிடங்கள்: 'ஜெனரல் ஆபிசர்' பிரிவில் 500 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி/ சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: 22-35 (31.7.2025ன் படி), அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
சம்பளம்: ரூ. 64820 – 93960/-
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 118.
கடைசிநாள்: 30.8.2025
தேர்வு அறிவிப்பினை படிக்க : bankofmaharashtra.in