விவசாயிகளுக்கு அடையாள அட்டை

உழவர் உதவியகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.;

Update:2022-06-02 22:07 IST

திருபுவனை

திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு உழவர் உதவியகத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட விவசாயி களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் அதிகாரி பார்த்திபன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இதில் கிராம விரிவாக்க பணியாளர்கள் பக்கிரி, புவனேஸ்வரி, செயல் விளக்க உதவியாளர் வள்ளியம்மா, ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, மஸ்தூர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த அடையாள அட்டை மூலம் விவசாயிகள் பயிர் கடன் மானியம், பயிர் காப்பீடு உள்ளிட்டவை பெறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்