பானிபூரி கடையை சூறையாடிய 3 பேர் கைது

Update: 2023-05-26 16:50 GMT

புதுச்சேரி

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். சாந்த் முகமது. இவர் புதுவை ராஜா நகரில் தங்கி இருந்து லெனின் வீதியில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 3 இளைஞர்கள் பானி பூரி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லை. அதை கேட்டபோது ஆத்திரத்தில் கடையை சூறையாடி விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது டி.ஆர்.நகரை சேர்ந்த நாகராஜ், அண்ணா நகரை சேர்ந்த டேனியல், குயவர்பாளையத்தை சேர்ந்த கவுதம் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்