பெண் வக்கீலிடம் 'கைவரிசை' காட்டியவர் மீது வழக்குப்பதிவு

பெண் வக்கீலிடம் அநாகரீகமாக முறையில் நடந்து கொண்டவர் மீது காரைக்கால் நகர் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-06-02 14:47 GMT

காரைக்கால்

புதுச்சேரியை சேர்ந்த 44 வயது நிரம்பிய பெண் வக்கீல் ஒருவர், காரைக்கால்மேடு ஸ்ரீரேணுகாதேவி அம்மன் கோவிலில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டார். அதன் பின்னர் காரைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பகல் உணவு சாப்பிட்டு விட்டு கைகழுவி கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் நின்ற காரைக்காலை சேர்ந்த மோகன் (52) என்பவர், பெண் வக்கீலின் பின்புறம் கையால் தட்டி அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் காரைக்கால் நகர் போலீசார் மோகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்