மனைவியை தாக்கி கொலை மிரட்டல்

புதுவை புதுசாரம் பகுதியில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

Update: 2023-05-31 18:25 GMT

புதுச்சேரி

புதுவை புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அஷ்டலட்சுமி (வயது32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அஷ்டலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரையும், குழந்தைகளையும் பன்னீர் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அஷ்டலட்சுமியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் பன்னீர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்