கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Update: 2022-11-25 16:05 GMT

புதுச்சேரி

புதுச்சேரி கருவடிக்குப்பம் சண்முகா நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சுமித்ரா (வயது 21). லாஸ்பேட்டையில் உள்ள சமுதாய கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு டி.சி. வாங்க சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஏழுமலை லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்ராவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்