பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

காரைக்கால் வலத்தெருவில் நடனகாளியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-02 16:33 GMT

கோட்டுச்சேரி

காரைக்கால் வலத்தெருவில் நடனகாளியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி மேளதாளம் முழங்க பக்தர்கள் பால்குடம் எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்