நாளை மின்சார நிறுத்தம்
திருவண்டார் கோவில் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;
புதுச்சேரி
திருபுவனை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி திருவண்டார்கோவில், ஜெயா நகர், திருபுவனைபாளையம், மதகடிப்பட்டுபாளையம், மதகடிப்பட்டு (ஒரு பகுதி), நல்லூர், நல்லூர் குச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.