தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-16 16:13 GMT

பாகூர்

பாகூர் அடுத்த கன்னியக்கோவில் மதிகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 45). கூலித்தொழிலாளி. அவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நந்தகோபாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி மகேஸ்வரி கண்டித்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்