தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை

முதலியார்பேட்டை மாங்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை,

Update: 2023-05-31 18:30 GMT

புதுச்சேரி

முதலியார்பேட்டை மாங்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது35). மெக்கானிக். இவருக்கு குடிபழக்கம் உண்டு. இவரது மனைவி உமா மகேஸ்வரி (33). குடிபழக்கம் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை பலமுறை கண்டித்தும் கணவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு பூரணாங்குப்பத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் இருந்த ராஜ்குமார், வீட்டின் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்