காதல் தோல்வியால் மெக்கானிக் தற்கொலை

மூலக்குளத்தில் காதல் தோல்வியால் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-05 16:44 GMT

மூலக்குளம்

மூலக்குளத்தில் காதல் தோல்வியால் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.

மெக்கானிக்

மூலக்குளம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மகன் பாலாஜி (வயது 22). மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் மெக்கானிக். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண், ஒருவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது காதலை அந்த இளம்பெண் ஏற்கவில்லை. இதனால் பாலாஜி விரக்தியில் இருந்து வந்தார். விரக்தி அடைந்த பாலாஜி வீட்டில் எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

பரிதாப சாவு

இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  மாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை சுரேஷ், ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்