பேராசிரியை கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கோட்டுச்சேரியில் பேராசிரியையின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-26 16:30 GMT

கோட்டுச்சேரி

நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 60). அவரது மனைவி மங்கையர்கரசி (54). இவர் பொறையாறு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நந்தகுமார் குடும்பத்துடன் காரைக்கால் புளியங்கொட்டை சாலையில் வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த அவர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்