சட்டமன்ற கூட்ட அரங்கை தயார்படுத்தும் பணி தீவிரம்

புதுவை சட்டமன்ற கூட்டம் 20-ந் தேதி கூடுகிற நிலையில் அரங்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-09-15 16:26 GMT

புதுச்சேரி

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடந்தது. அப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தொடர் மார்ச் 31-ந்தேதி முடிவடைந்தது.

6 மாதத்துக்கு ஒருமுறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி வருகிற 20-ந்தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. இதற்காக சட்டமன்ற கூட்ட அரங்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரங்கை தூய்மைப்படுத்துவது, ஒலி, ஒளி அமைப்புகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்