குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி

வில்லியனூர் அருகே உள்ள சிவன் கோவில் குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2023-04-06 23:19 IST

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள கோடம்பாக்கம் சிவன் கோவில் குளத்தில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வில்லியனூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் அவர் அதே பகுதியை சேர்ந்த வாசுதேவன் (வயது 46) என்பதும், குளத்தில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்