வலம்புரி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எல்லைப்பிள்ளைச்சாவடி வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி விவேகானந்தா நகரில் உள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவில் இன்று காலை 5.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், 7 மணிக்கு மஹா பூர்ணாஹீதியும் நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க புனித தீர்த்தக்குடங்கள் கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் இன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் தேர்வீதி உலா நடந்தது.