விஷம் தின்று பெண் தற்கொலை

Update:2023-03-03 23:43 IST

அரியாங்குப்பம்

புதுச்சேரி பூரணாங்குப்பம் பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவரது கணவர் கடந்த 13 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தனது மகள் சவுந்தர்யாவுடன் வசித்து வந்தார். செல்விக்கு முடக்கு வாத நோய் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு யாரும் ஆதரவாக இல்லை என மன வருத்தத்தில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்