அதிமுக ஆலோசனை கூட்டம் குறித்து முன்னாள் அமைச்சர்... ... துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Daily Thanthi 2022-06-27 06:21:18.0

அதிமுக ஆலோசனை கூட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். மேலும் 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளனர்.

அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார். துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.


Next Story