1000 காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்vv


1000 காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்vv
x

புதுவை காவல்துறையில் 1000 காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி

புதுவை காவல்துறையில் 1000 காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவாதிக்க தயார்

புதுவையில் கடந்த ஆட்சியை விட சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் என்னிடம் உள்ளது.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் நான் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக உள்ளேன். ரவுடிகளை ஒடுக்க ஆப்ரேசன் திரிசூல், ஆப்ரேசன் விடியல் என செயல்பட்டு வருகிறோம். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியால் எதையும் ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியாது.

காவல்துறையில் மேலும் 1000 காவலர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். இதில் 600 பேர் ஊர்க்காவல்படை பிரிவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான கோப்பு தயார் நிலையில் உள்ளது. நிதித்துறையின் ஒப்புதலைபெற்று அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

கடந்த ஆட்சியில் போதைப்பொருள் கடத்தலை கண்டுகொள்ளவில்லை. நாங்கள் கடத்தலை தடுத்து குற்றவாளிகளை கைது செய்கிறோம். நவீன வசதிகள் கொண்ட வாகனங்களும் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மின்துறை பிரச்சினை

தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயத்திடம், மின்துறை தனியார் மயம் தொடர்பாக நிருபர்கள் கேட்டபோது, அதுதொடர்பாக கருத்துசொல்ல விரும்பவில்லை என்று முடித்துக்கொண்டார்.


Next Story