மது குடித்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் சாவு


மது குடித்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் சாவு
x

மனைவி இறந்த சோகத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.

திருக்கனூர்

மனைவி இறந்த சோகத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.

உதவி சப்-இன்ஸ்பெக்டர்

திருக்கனூர் திருவண்ணாமலை சாலையை சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர் புதுச்சேரி காவல்துறையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது மகன் மணிகண்டன் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

ராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். மனைவியின் பிரிவை தாங்காத ராஜா அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பிணமாக கிடந்தார்

இந்த நிலையில் நேற்று வீட்டில் படுத்திருந்த ராஜா வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை தட்டினார்கள். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதன்பின் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ராஜா பிணமாக கிடந்தார். அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story