தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு


தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
x

புதுவை பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் தீவிர விசாரணை.

பாகூர்

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மனைவி சந்தானம் (வயது 82). இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாகூர் அடுத்த குமந்தான்மேடு, வீரன் கோவல் தெருவில் பழனி என்பவரின் வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சந்தானம், தனது மகள் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் இன்று காலை தென்பெண்ணை ஆற்றங்கரையை ஓரமாக சந்தானம் உடல் கரை ஒதுங்கியது. எனவே, அவர் தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story