முதியவர் மீது தாக்குதல்


முதியவர் மீது தாக்குதல்
x

கல்மேடுபேட் அருகே சண்டையை சமாதானம் செய்து வைத்த முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை,

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் அடுத்த கல்மேடுபேட் அம்பேத்கர் வீதியில் கோவில் கட்டுமான பூமிபூஜை நடந்தது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 70) என்பவர் சமாதானம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பை சேர்ந்த 3 பேர், அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இது குறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story