புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று
x

புதுச்சேரியில் புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,571 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 15 பேர் புதுச்சேரியையும், தலா ஒருவர், காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

தற்போது 2 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 140 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 26 பேர் குணமடைந்தனர். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 114 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 528 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 263 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 32 ஆயிரத்து 586 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது


Next Story