கொரோனா தடுப்பூசி திருவிழா


கொரோனா தடுப்பூசி திருவிழா
x

புதுச்சோியில் கொரோனா தடுப்பூசி திருவிழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

புதுச்சேரி

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி திருவிழா புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சமுதாய நலவழி மையங்களிலும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து பொதுமக்களிடம் 9 ஆட்டோக்கள் மூலமாக ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு நடந்தது. நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை இயக்குனர்கள் முரளி, ராஜாம்மாள் ஆனந்தலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story