போட்டி நிறைந்த உலகில் உயர் பதவிக்கு வருவது சவாலானது


போட்டி நிறைந்த உலகில் உயர் பதவிக்கு வருவது சவாலானது
x

போட்டி நிறைந்த உலகில் உயர் பதவிக்கு வருவது சவாலானது என்று சிவசங்கர் எம்.எல்.ஏ. பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

புதுச்சேரி

போட்டி நிறைந்த உலகில் உயர் பதவிக்கு வருவது சவாலானது என்று சிவசங்கர் எம்.எல்.ஏ. பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

துணை தலைவராக தேர்வு

புதுடெல்லி அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் முதன்மை துணைத்தலைவராக புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சிவசங்கர் எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நேர்மறை எண்ணம் கொண்டவர்கள்

அகில இந்திய அமைப்பின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதன் மூலம் சிவசங்கர் எம்.எல்.ஏ. புதுவைக்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய போட்டி நிறைந்த உலகில், உயர் பதவிக்கு ஒருவர் போவது என்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்று.

வணிகர்கள் எப்போதும் நேர்மறை எண்ணம் கொண்டவர்கள். கொரோனா காலத்திலும் வணிகர்கள் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டார்கள். வணிகர்கள் இல்லை என்றால் கலாசாரம் கிடையாது. வணிகர்களைப் போன்று கடுமையான உழைப்பாளிகளை வேறு எங்கும் பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்கள்

விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நேரு, பாஸ்கர், செந்தில்குமார், பிரகாஷ்குமார், வெங்கடேசன், அசோக்பாபு மற்றும் அகில இந்திய வணிகர் சம்மேளன நிர்வாகிகள், வியாபாரிகள், பலர் கலந்துகொண்டனர்


Next Story