புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை


புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
x

புதுவையில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில் 22 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,155 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இன்று 5 பேர் குணமடைந்தனர். தற்போது 22 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 95 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 583 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 148 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 4 ஆயிரத்து 402 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


Next Story