நாளையும், நாளை மறுநாளும் மின்தடை செய்யப்படும் இடங்கள்


நாளையும், நாளை மறுநாளும் மின்தடை செய்யப்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் சேதாரப்பட்டு பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் மின்தடை செய்யப்படுகிறது.

சேதராப்பட்டு

சேதராப்பட்டு - குரும்பாபேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. இதன் விவரம் வருமாறு:-

சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு, பழைய மற்றும் புது காலனி, முத்தமிழ் நகர் (ஒரு பகுதி) மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இதேபோல் திருபுவனை மின் பாதையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏரிப்பாக்கம், நத்தமேடு, சூரமங்கலம், மொளப்பாக்கம், மடுகரை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.


Next Story