சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி
அரியூரில் சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்தது.
புதுச்சேரி
புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக கடந்து வருகிறது. இதற்காக வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டு பணிகள் இரவு, பகலாக நடந்து வருகின்றன. மேலும் சாலையில் இருந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டு வேறு இடத்தில் நடப்படுகின்றன.
இந்தநிலையில் அரியூர் தனியார் மருத்துவ கல்லூரி முன்பு சாலையின் குறுக்காக சென்ற மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தன. நல்லவேளையான அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் உதவி மின் பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர் முகமது இஸ்மாயில் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்இணைப்பை துண்டித்து விட்டு மின்கம்பியை அகற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story