கொட்டகை எரிந்து நாசம்
புதுச்சேரியில் தொழிலாளர்கள் தங்கும் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
புதுச்சேரி
புதுச்சேரி சாரம் அன்னை தெரசா நகர் பகுதியில் ஒரு கட்டிடம் கட்டும் பணி நடந்தது. தொழிலாளர்கள் தங்குவதற்காக தனியாக ஒரு கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுமான பணி திடீரென நிறுத்தப்பட்டது. எனவே அந்த கொட்டகையில் தற்போது யாரும் தங்கவில்லை.
இந்த நிலையில் இன்று இரவு திடீரென அந்த கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கொட்டகை முற்றிலும் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story