கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் நாளை தேர்வு
தமிழக கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் நாளை தேர்வு நடைபெறுகிறது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 13 முதல் 24 வயது வரையிலான இளம் கிரிக்கெட் வீராங்கனைகளை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்குபெறச்செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்ட வீராங்கனைகளுக்கான தேர்வு நாளை (சனிக்கிழமை) மாலை 2 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் உள்ள கிரிக்கெட் வலைப்பயிற்சி தளத்தில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனைகள் தங்களது பெயர்களை உரிய படிவத்துடன் ஆதார் கார்டு நகலுடன் இணைத்து பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களை 9443112678 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் மாரீசுவரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story