டைரக்டர்கள் ஆவேசம்; சீமான் நடித்த படத்தை வாங்க பயம் ஏன்?


டைரக்டர்கள் ஆவேசம்; சீமான் நடித்த படத்தை வாங்க பயம் ஏன்?
x
தினத்தந்தி 27 Aug 2019 11:04 AM GMT (Updated: 27 Aug 2019 11:04 AM GMT)

இரட்டை டைரக்டர்கள் ஆர்.விஜய் ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் ஆகியோரின் இயக்கத்தில், ஆஸீப் பிலிம் இண்டர்நேஷனல் தயரித்துள்ள புதிய படம், ‘தவம்.’

‘தவம்’ படத்தில், டைரக்டர்-நடிகர்-அரசியல்வாதி சீமான் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் வசி, நாயகியாக புதுமுகம் பூஜாஸ்ரீ ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

விவசாயத்தை காப்பாற்றி எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி காட்டும் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் சீமான் நடித்து இருக்கிறார். இவருடைய திறமையான நடிப்பும், புத்திசாலித்தனமான திரைக்கதையும் படத்தில் வலுவான அம்சமாக அமைந்து இருக்கிறது. இருப்பினும் படத்தை வாங்குவதற்கு வினியோகஸ்தர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி டைரக்டர்கள் விஜய் ஆனந்த், சூரியன் ஆகிய இருவரும் கூறியதாவது:-

“தவம் படம் வினியோகஸ்தர் களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தில், இன்றைய தமிழக சூழலை பிரதிபலிப்பது போன்ற சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. வியாபாரத்துக்கு ஏற்ற ஜனரஞ்சகமான காட்சிகளும் படத்தில் உள்ளன. படத்தை பார்த்த வினியோகஸ்தர்கள் பிரமித்து போனார்கள். அப்படியிருந்தும் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் தயங்குகிறார்கள்.

சில அரசியல்வாதிகளை பகைத்துக்கொள்ள நேரிடுமோ என்ற பயம்தான் இதற்கு காரணம் என்று தெரிகிறது. இருப்பினும், எப்படியாவது ‘தவம்’ படத்தை திரைக்கு கொண்டு வந்து விடுவோம். அதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.” 

Next Story