இன்னும் 2 வாரங்களில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு முடிகிறது


இன்னும் 2 வாரங்களில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு முடிகிறது
x
தினத்தந்தி 25 April 2021 11:53 PM GMT (Updated: 25 April 2021 11:53 PM GMT)

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனாவால் தாமதம் ஆனது.

ஊரடங்கு தளர்வில் கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு மீண்டும் முடங்கியது. சமீபத்தில் படப்பிடிப்பை தொடங்கினர். பூந்தமல்லி அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் சில காட்சிகளை படமாக்கி விட்டு ஐதராபாத் சென்றனர். அங்குள்ள திரைப்பட நகரில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த் தனி விமானத்தில் கடந்த 7-ந்தேதி ஐதராபாத் சென்றார். அங்கு தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். படப்பிடிப்பில் கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்புகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. படக்குழுவினர் வெளியே செல்லவும் வெளிநபர்கள் படக்குழுவினரை சந்திக்கவும் தடை விதித்தனர். 

படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் 2 வாரங்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டு ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிவா இயக்குகிறார். படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது.

Next Story