கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன் திருமணம் சென்னையில் நடக்கிறது


கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன் திருமணம் சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 25 July 2021 11:12 PM GMT (Updated: 25 July 2021 11:12 PM GMT)

சினிமா பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான கவிஞர் சினேகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணப்பெண்ணின் பெயர் கன்னிகா. இது பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் ஆகும்.

சினேகன்-கன்னிகா திருமணம் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10:45 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த திருமணம் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையில் நடக்கிறது.

தனது திருமணம் பற்றி கவிஞர் சினேகன் கூறியதாவது:-

இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கு பேராபத்தாக இருக்கிறது. அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் என் திருமணம் நடைபெற இருக்கிறது.

இவ்வாறு கவிஞர் சினேகன் கூறினார்.

Next Story