கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன் திருமணம் சென்னையில் நடக்கிறது
சினிமா பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான கவிஞர் சினேகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணப்பெண்ணின் பெயர் கன்னிகா. இது பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் ஆகும்.
சினேகன்-கன்னிகா திருமணம் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10:45 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த திருமணம் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையில் நடக்கிறது.
தனது திருமணம் பற்றி கவிஞர் சினேகன் கூறியதாவது:-
இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கு பேராபத்தாக இருக்கிறது. அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் என் திருமணம் நடைபெற இருக்கிறது.
இவ்வாறு கவிஞர் சினேகன் கூறினார்.
Related Tags :
Next Story