நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு
நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்தபோது காணாமல் போனது.
சென்னை,
களவாணி உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் விமல். இவர் சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் கடந்த 12-ந் தேதி அன்று சென்னை கானாத்தூர் அருகில் உள்ள பனையூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது ஏராளமான ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் என்னுடன் செல்பி எடுக்க விரும்பினார்கள். அதற்கு ஒப்புக்கொண்டேன். ரசிகர்களுடன் நான் எனது செல்போனில் செல்பி எடுத்தேன். கூட்ட நெரிசலில் எனது விலை உயர்ந்த செல்போன் காணாமல் போய்விட்டது. யாரோ செல்போனை திருடிச் சென்றிருக்கலாம் என்று கருதுகிறேன். உரிய நடவடிக்கை எடுத்து செல்போனை மீட்டுத்தர வேண்டுகிறேன்.
இவ்வாறு நடிகர் விமல் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
களவாணி உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் விமல். இவர் சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் கடந்த 12-ந் தேதி அன்று சென்னை கானாத்தூர் அருகில் உள்ள பனையூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது ஏராளமான ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் என்னுடன் செல்பி எடுக்க விரும்பினார்கள். அதற்கு ஒப்புக்கொண்டேன். ரசிகர்களுடன் நான் எனது செல்போனில் செல்பி எடுத்தேன். கூட்ட நெரிசலில் எனது விலை உயர்ந்த செல்போன் காணாமல் போய்விட்டது. யாரோ செல்போனை திருடிச் சென்றிருக்கலாம் என்று கருதுகிறேன். உரிய நடவடிக்கை எடுத்து செல்போனை மீட்டுத்தர வேண்டுகிறேன்.
இவ்வாறு நடிகர் விமல் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story