ஜி.வி.பிரகாசின் 'ஜெயில்' படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு


ஜி.வி.பிரகாசின் ஜெயில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 26 Nov 2021 5:42 PM GMT (Updated: 26 Nov 2021 5:42 PM GMT)

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ஜெயில்' திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'ஜெயில்'. இந்த படத்தில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். நந்தன் ராம், 'பசங்க' பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி இந்தப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. 

படத்தின் தயாரிப்பார் முதலில் படத்தின் விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும் தற்போது திடீரென விநியோக உரிமையை வேறு நிறுவனத்திற்கு மாற்றியதாகவும் அந்த வழக்கில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பதில் அளிக்குமாறு 'ஜெயில்' படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story