நம்பமுடியாத அனுபவத்திற்கு நன்றி..நயன்தாராவுடனான சந்திப்பு குறித்து நடிகை மலைக்கா அரோரா பதிவு
கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தய போட்டியை காண சென்ற பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவை நயன்தாரா சந்தித்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, நீண்டகால காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 குழந்தைகளுடன் சவுதி அரேபியாவில் நடைபெறும் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தய போட்டியை காண சென்றுள்ளனர்.
அங்கு பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவை நயன்தாரா சந்தித்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தில் நயன்தாரா மஞ்சள் நிற உடையிலும் , மாளவிகா அரோரா வெள்ளை நிற உடையிலும் இருந்தனர். இந்த புகைப்படத்தை மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் எப்1 கிராண்ட் பிரிக்ஸிற்காக ஜெட்டாவில் எனது 12 மணிநேரம் எப்படி இருந்தது. என் பயணம் ஒரு சிலிர்ப்பான பயணமாக இருந்தது. நம்பமுடியாத அனுபவத்திற்கு நன்றி..என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதனை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹார்ட் எமோஜ் உடன் பகிர்ந்துள்ளார். இது மலைக்கா அரோராவுடனான சந்திப்பு எவ்வாறு இருந்தது என்பதை பிரதிபலிக்கிறது .