'பெண்கள் அதையெல்லாம் உடைத்து வெளியே வருவது மிகப் பெரிய விஷயம்' - நயன்தாரா


பெண்கள் அதையெல்லாம் உடைத்து வெளியே வருவது மிகப் பெரிய விஷயம் - நயன்தாரா
x
தினத்தந்தி 28 April 2024 7:52 AM GMT (Updated: 28 April 2024 8:27 AM GMT)

இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் 'அன்னபூரணி'.

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் சமீபத்தில் நடித்த படம் 'அன்னபூரணி'. இது நயன்தாராவின் 75-வது படமாகும். இதனை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கினார். நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்தார்.

இப்படம் கடந்த வருடம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இது நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

நயன்தாரா தான் ஹீரோவாக நடித்த படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியை பெற்றவர். இந்நிலையில் நயன்தாரா, பெண்கள் குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

பெண்கள், சமூகத்தில் இருக்கும் பல்வேறு சூழ்நிலைகளை உடைத்து வெளியே வருவது மிகப் பெரிய விஷயமாகும். அதை அவர்கள் தங்களுக்காக செய்கிறார்கள் என்பதை தாண்டி, இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டு கிடக்கும் பெண்களுக்காகவும் சேர்த்து செய்து இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" இவ்வாறு பேசினார்.


Next Story