68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூர்யா,ஜோதிகா..!


68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூர்யா,ஜோதிகா..!
x

68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி,

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட சினிமாக்களுக்கான 68-வது தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும், 'மண்டேலா' திரைப்படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா விருது வாங்குவதற்காக தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story