கார் விபத்தில் சிக்கிய 'ஜவான்' பாடகியின் பதிவு


கார் விபத்தில் சிக்கிய ஜவான் பாடகியின் பதிவு
x
தினத்தந்தி 19 March 2024 9:12 AM GMT (Updated: 19 March 2024 9:14 AM GMT)

'வந்த இடம்' என்ற தமிழ்ப் பாடலை பாடியிருந்த பின்னணி பாடகி மன்ங்லி இரண்டு நாள்களுக்கு முன் நடந்த கார் விபத்தில் லேசான காயமடைந்தார்.

ஹைதராபாத்,

தெலுங்கு பின்னணி பாடகி, மன்ங்லி. இவர் 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடலை, படத்தின் கன்னடப் பதிப்பில் பாடி பிரபலமானவர். தெலுங்கில் பல பாடல்களைப் பாடியுள்ள இவர், ஜவான் படத்துக்காக அனிருத்துடன் இணைந்து, 'வந்த இடம்' என்ற தமிழ்ப் பாடலை பாடியிருந்தார். மைக்கேல் உட்பட சில தமிழ்ப் படங்களில் பாடியுள்ள இவர், ரங்காரெட்டி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆன்மிக விழாவில் பாடல் பாடிவிட்டு காரில் ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார்.

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொண்டபள்ளி அருகே வந்துகொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் மன்ங்லியும் அவருடன் வந்தவர்களும் லேசான காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி பெற்றனர். இந்தவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், லாரி டிரைவரை கைது செய்தனர்.

பாடகி மன்ங்லி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் " இரண்டு நாள்களுக்கு முன் எதிர்பாராத விதமாக கார் விபத்து ஏற்பட்டது. நான் தற்போது நலமாக இருக்கிறேன். தனது உடல்நிலை பற்றி தயவு செய்து வதந்தி பரப்ப வேண்டாம். " என்று கேட்டுக்கொண்டார்.



Next Story