கமலின் கடிதத்தைப் படித்தபோது உண்டான உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - லோகேஷ் கனகராஜ்


கமலின் கடிதத்தைப் படித்தபோது உண்டான உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - லோகேஷ் கனகராஜ்
x

இயக்குனர் லோகேஷ் கனகராஜை வாழ்த்தி நடிகர் கமலஹாசன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த 3-ந்தேதி வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் படம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜை வாழ்த்தி நடிகர் கமலஹாசன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் "லோகேஷ் கனகராஜூக்கான பாராட்டுகள் தொடர வாழ்த்துகள்; அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள் , லோகேஷின் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும்". என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.


கமலஹாசனின் இந்த கடிதத்தை சுட்டிக்காட்டி டுவீட்டரில் கருத்து தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "கடிதத்தைப் படித்தபோது உண்டான உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நன்றி ஆண்டவரே" என்று அவர் அதில் பதிவிட்டார்.


Next Story