இளம் நடிகர் தற்கொலை
இளம் கன்னட நடிகர் சம்பத் ஜெயராம். இவர் கன்னட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். பெங்களூர் நெலமங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பத் ஜெயராம் திடீரென்று வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 32. சம்பத் ஜெயராம் மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பத் ஜெயராமுக்கு கடந்த சில நாட்களாக பட வாய்ப்புகள் வரவில்லை. தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும் அழைப்புகள் வரவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். சம்பத் ஜெயராமுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
கன்னட நடிகர் ராஜேஷ் துருவா முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உனது பிரிவை தாங்கும் சக்தி இல்லை. நிறைய படங்கள் தயாராகி நிலுவையில் உள்ளன. உனது கனவை நிறைவேற்ற இன்னும் காலம் இருக்கிறது. திரும்பி வா'' என்று குறிப்பிட்டு உள்ளார்.