புது பங்களாவில் குடியேறினார், கீர்த்தி சுரேஷ்!


புது பங்களாவில் குடியேறினார், கீர்த்தி சுரேஷ்!
x
தினத்தந்தி 28 Sep 2018 6:16 AM GMT (Updated: 28 Sep 2018 6:16 AM GMT)

ஒரு சில பெரிய கதாநாயகர்களை தவிர, மற்ற எல்லா பெரிய கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து விட்ட கீர்த்தி சுரேஷ், மேலும் சில பெரிய கதாநாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நயன்தாரா, திரிஷா போன்ற பெரிய கதாநாயகிகள் கதை நாயகிகளாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களால் விடப்பட்ட காலி இடத்தை கீர்த்தி சுரேஷ் லாவகமாக கைப்பற்றிக் கொண்டார்.

இதனால், அவருக்கு வரவு அதிகமாகிக் கொண்டே போகிறது. இதுவரை அவர் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் அவர், ஒரு ஆடம்பர பங்களாவை கட்டி வந்தார். கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, சமீபத்தில் புதுமனை புகுவிழா நடந்தது. கீர்த்தி சுரேஷ், அரும்பாக்கம் வீட்டை காலி செய்து விட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் கட்டிய புது பங்களாவுக்கு குடிபோய் விட்டார்! 

Next Story