"ரஜினிக்கு தனி ‘பவர்’ உள்ளது" பாரதிராஜா
சமீபத்தில் ஒரு படவிழாவுக்கு சென்றிருந்த டைரக்டர் பாரதிராஜா ரஜினிக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார்.
பட விழாவில், ‘‘ரஜினியின் அரசியல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. எனக்கும், அவருக்கும் 48 ஆண்டு நட்பு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன், அய்யப்பன் என ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு ‘பவர்’ உள்ளது. எல்லா அம்மனும் மீனாட்சி அம்மனாகி விட முடியாது. அந்த ‘பவர்’ அமைந்திருக்கும் இடத்தை பொருத்தது. அதுபோல மனிதர்களுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. அது அவரவருக்கான தனித்தன்மை. அதேபோல் ரஜினிக்கும் ஒரு தனி ‘பவர்’ உள்ளது. எல்லோருமே ரஜினி ஆகிவிட முடியாது’’ என்று பாரதிராஜா பேசியிருக்கிறார்.
இது, ரஜினிகாந்த் ரசிகர்களை உற் சாகப்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story